
பேங்கோக், ஜூன்-28 – தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான புக்கெட் தீவு மற்றும் அதன் விமான நிலையத்தில் 4 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை, புக்கெட் விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்குக் கரையிலுள்ள பிரபலமான பாத்தோங் கடற்கரையில் 2 வெடிகுண்டுகள் மற்றும் தெற்குப் பகுதியிலுள்ள பிராம்தேப் கேப்பில் (Phromthep Cape) ஒரு வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்பட்டன.
எனினும் வெடிகுண்டு ஒழிப்பு நிபுணர்களால் அவை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக, Bangkok Post நாளேடு கூறியது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை சந்தேக அடிப்படையில் இருவர் கைதுச் செய்யப்பட்டனர்;
அவர்கள் வழங்கிய வாக்குமூலத்தில் தான் வெடிகுண்டுகள் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
கைதான இருவரும் தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள பட்டாணி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஆனால் வெடிகுண்டு வைத்த அவர்களின் நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இச்சம்பவத்தை அடுத்து, check-in மற்றும் பாதுகாப்பு சோதனைகளுக்கு வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஆகுமென்பதை, பயணிகள் புரிந்துகொள்ள வேண்டுமென புக்கெட் விமான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது