Latestமலேசியா

சாலையில் SUV வாகன ஓட்டுனரின் முரட்டுத்தனம் லோரி ஓட்டுநர் தாக்கப்பட்டார்

கோலாலம்பூர், ஜூன் 30 – டோல் சாவடிக்கு அருகே சாலையில் SUV வாகனத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அந்த வாகனத்தின் ஓட்டுநருடன் ஏற்பட்ட தகராறினால் தனது முகத்தில் ரத்தம் எற்படும் வகையில் காயம் ஏற்பட்டதாக லோரி ஓட்டுனர் ஒருவர் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக வெளியான காணொளியில் சம்பவம் நடந்த இடம் மற்றும் தேதி சரியாகத் தெரியவில்லை. திடீரென SUV ஓட்டுனர் இடதுபுறத்தில் இருந்து தனது வழிதடத்திற்கு முன்னே சென்றதால் இந்த மோதல் ஏற்பட்டதாக லோரி ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.

ஒரு லோரி டோல் சாவடியை நெருங்கும் வரிசையில் காத்திருந்ததை முகநூலில் வைரலான காணொளியில் காணமுடிந்தது. வீடியோவில், தொப்பி அணிந்த ஒரு நபர் லோரியில் அமர்ந்திருந்த ஓட்டுநரை அணுகி, ஒரு பொருளால் கதவை மீண்டும் மீண்டும் தட்டினார்.

நான் உங்களை காவல் நிலையத்தில் சந்திப்பேன் என்று லோரி ஓட்டுநர் கூறுகிறார். அதனை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான சத்தம் கேட்டதோடு , தனது முகத்தில் ரத்தம் வழிகிறது என லோரி ஓட்டுநர் கூறுகிறார். பின்னர் SUV ஓட்டுநரும் அவரது நண்பரும் வாகனத்திற்குத் திரும்பி சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து வெளியேறுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!