
ஈப்போ, ஜூன் 30 – ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா தேர்தலில் அதன் நடப்பு தலைவர் ஆர். சீதாராமன் தனது தலைவர் பதவியை தற்காத்துக் கொண்டுள்ளார்.
தலைவர் பதவிக்கான தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எஸ். நடேசனை வீழ்த்தி சீத்தாராமன் வெற்றி பெற்றதோடு இந்த தேர்தலில் போட்டியிட்ட அவரது அணியைச் சேர்ந்த அனைவரும் வெற்றி பெற்றனர்.
நடப்புத் துணைத் தலைவர் கே.சுரேன் மீண்டும் துணைத் தலைவரான நிலையில், நடப்புச் செயலாளரான வி.எம். தியாகராஜன் செயலாளார் பதவிக்கும் , துணைச்செயலாளர் பதவிக்கு எம்.குமரகுரு மற்றும் பொருளாளராக கே.ஆண்டாள் நேசன் ஆகியோர் போட்டியின்றி வெற்றிப் பெற்றனர்.
அதோடு, ஸ்ரீ இலங்கையர் பிரிவுக்கான செயற்குழுவிற்கு பி.உமாபரம் மற்றும் தயாளன் தேர்வுப் பெற்றனர் . இந்த தேர்தலில் ஆர்.சிவபாலன், கோபிநாதன், நீலகாந்தன் , கண்ணையா, டாக்டர் சசிதரன், மனோகர், பி.புருசோத்தமன், பன்னீர் செல்வம், ஆகியோர் செயலவை உறுப்பினராக வெற்றி பெற்றனர்.
தணிக்கையாளர்கள் பதவிக்கு கிருஷ்ணன், தண்ணீர்மலை போட்டியின்றி தேர்வு பெற்றனர். வழக்கறிஞர் மதியழகன் தேர்தல் அதிகாரியாக பணியாற்றி சிறப்பான முறையில் கூட்டத்தை வழி நடத்தினார். ஈப்போ மகா மாரியம்மன் ஆலய திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த தேர்தலில் 266 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.