Latestமலேசியா

மும்பை வந்த தாய்லாந்து பயணிக்கு சொந்தமான சரக்கு பெட்டியில் உயிருடன் 16 பாம்புகள் பறிமுதல்

மும்பை, ஜூன் 30 – தாய்லாந்தில் இருந்து உயிருள்ள பாம்புகளை தனது சரக்குப் பெட்டியில் கொண்டு வந்த விமானப் பயணியை மும்பையில் உள்ள இந்திய சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக பாம்புகளை கொண்டு வந்த விமானப் பயணி கைது செய்யப்பட்டுள்ளார். இதன்வழி சுங்க அதிகாரிகள் மற்றொரு வனவிலங்கு கடத்தல் முயற்சியை முறியடித்தனர், 16 உயிருள்ள பாம்புகள் தாய்லாந்திலிருந்து திரும்பிய பயணியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக மும்பை விமான நிலையத்தைச் சேர்ந்த சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று வந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார் என்று சுங்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

செல்லப்பிராணி வர்த்தகத்தில் பெரும்பாலும் விற்கப்படும் ஊர்வன உயிரினங்களில் உயிருள்ள பாம்புகளும் அடங்கும், மேலும் அவை பெரும்பாலும் விஷமற்றவை அல்லது மக்களைப் பாதிக்க முடியாத அளவுக்கு பலவீனமான விஷத்தைக் கொண்டிருந்தன. அவற்றில்
கார்டர் ( Garter ) பாம்புகள், காண்டாமிருக எலி பாம்பு மற்றும் கென்ய மணல் போவா போன்றவை அடங்கும். ஜூன் தொடக்கத்தில், தாய்லாந்திலிருந்து வந்த டஜன் கணக்கான விஷ விரியன் பாம்புகளை கடத்தும் ஒரு பயணியை சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சில நாட்களுக்குப் பிறகு, பல்லிகள், சூரிய பறவைகள் மற்றும் மரம் ஏறும் போசம்ஸ் ( Possums ) உட்பட 100 உயிரினங்களுடன் மற்றொரு பயணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். கடந்த மூன்றரை ஆண்டுகளில் தாய்லாந்து-இந்தியா விமானப் பாதையில் இறந்த மற்றும் உயிருடன் 7,000 க்கும் மேற்பட்ட விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!