
செப்பாங், ஜூலை 4 – கடந்த பிப்ரவரி மாதம், மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுக்கு எதிராக ஆபாசமான செய்திகளை முகநூலில் வெளியிட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
61 வயதான அந்த நபரின் உடல்நலம் மற்றும் காது கேளாமை பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, அவருக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுகளும் நீதிமன்றத்தில் வாசிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதற்கு முன்பு, குற்றம் சாட்டப்பட்டவரை மனநல மதிப்பீட்டிற்கு உட்படுத்த வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக ஜூன் 20 ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்டவர் இரண்டு முறை நீதிமன்றத்திற்கு வர தவறியதால் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் அபராதமும் ஒரு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.