
காஜாங், செப்டம்பர் 4 – செமிஞ்ஞேயில் நடந்த கார் டயர்கள் மற்றும் ரிம்கள் திருட்டுச் சம்பவம் தொடர்பான வைரல் காணொளியை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, 19 வயதான கல்லூரி மாணவர் ஒருவர் தனது காரிலிருந்து டயர்களும் ரிம்களும் களவாடப்படும்பொழுது அதனை கைபேசியில் பதிவுச் செய்து போலீசில் புகார் அளித்திருந்தார்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இக்குற்றம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கூடுதல் தகவல் அறிந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்புகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.



