Latestமலேசியா

கோத்தா திங்கி சாலை முச்சந்தியில் இரு கார்கள் மோதல்; 2 பேர் மரணம்

கோத்தா திங்கி, செப்- 22 ,

ஜோகூர், கோத்தா திங்கியில் Semangar நீர் சுத்திகரிப்பு நிலைய முச்சந்தியில் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மாண்டனர்.

காலை மணி 7.09 அளவில் நிகழ்ந்த அந்த துயரச் சம்பவத்தில் விபத்துக்குள்ளான ஒரு காரில் இருந்த 47 வயது பெண் ஓட்டுநரும் மற்றொரு காரை ஓட்டிய 37 வயது ஆடவரும் இறந்தனர்.

அவர்கள் இருவரும் வாகனங்களில் சிக்கிக் கொண்டதால் , தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அவர்களை மீட்டனர்.

எனினும் நிகழ்விடத்திலேயே அவர்கள் மரணம் அடைந்ததை சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் தலைவர் தலைமை Superintendent Yusof Othman தெரிவித்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!