
கோத்தா பாரு, செப் -30,
பல்வேறு குற்றங்களுக்காக வழங்கப்பட்ட போக்குவரத்து குற்றப் பதிவுகளுக்கான அபராதத் தொகையை செலுத்தத் தவறிய சுமார் 2 மில்லியன் சாலை
பயணர்கள் கருப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். Awas எனப்படும் தனியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு முறையின் கீழ்
53 A , சம்மன்கள் , 114 மற்றும் 115 நோட்டிஸ்கள் தொடர்பான குற்றங்களுக்காக பெற்ற சம்மன்களுக்கு தீர்வு காணாமல் இருப்பவர்களை இந்த நடவடிக்கை உள்ளடக்கியிருப்பதாக சாலை போக்குவரத்துத்துறையின் மூத்த அமலாக்க இயக்குனர்
டத்தோ முகமட் கிப்லி மா ஹசான் ( Muhammad Kifli Ma Hasan ) தெரிவித்தார்.
கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயத்துடன், குற்றவாளிகள்
300 ரிங்கிட் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என்பதோடு கெஜாரா சாலைக் குற்றங்களுக்கான குற்றப் புள்ளிகள் அமைப்பின் இன் கீழ் குற்றப் புள்ளிகளும் பயன்படுத்தப்படலாம். நிலுவையில் உள்ள சம்மன்கள் உள்ளவர்கள், மூன்று வகையான குற்றங்களுக்கும் கிடைக்கும் சிறப்பு கூட்டுச் சலுகையான 150 ரிங்கிட் நிலையான கட்டண விகிதத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார். இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கிய இந்த சலுகை இவ்வாண்டு இறுதி வரை நீடிக்கும்.