Latestமலேசியா

கூலாய் தொழிற்சாலையில் தீ விபத்து: தொழிலாளர் தீயில் கருகி பலி

கூலாய், நவம்பர் 13 – கூலாய் ‘Jalan Seelong Senai’ பகுதியில் அமைந்துள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 35 வயதான தொழிலாளர் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார்.

உயிரிழந்த அந்த ஆடவர் உள்ளூர் நபர் என்றும் அவரின் பெயர் இளங்கோ என்றும் குறிப்பிடப்பட்டது.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் என்று கூலாய் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் (BBP) இயக்கத் தளபதி முகமட் அஸ்ரி யூஸ்ரி தெரிவித்தார்.

ஆனால் தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலையை அடைந்த போது, சுமார் 20 விழுக்காடு தீயில் எரிந்திருந்தது என்று அவர் மேலும் கூறினார்.

தீயணைப்பு நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்பட்டு, தீ முழுமையாக அணைக்கப்பட்டது. உயிரிழந்தவரின் உடல் புலனாய்வு மற்றும் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!