Latestமலேசியா

ரொம்பின் பாலம் இடிந்து விழுந்தது; கர்ப்பிணி தாய், சிறுமி உட்பட 7 பேர் மீட்பு

ரொம்பின், ஜனவரி-3 – பஹாங், ரொம்பின், சுங்கை மொக் ஆற்றுப் பாலம் நேற்று காலை 8 மணியளவில் இடிந்து விழுந்தது.

இதனால், 11 முதல் 55 வயதுக்குட்பட்ட 7 பேர் அதில் சிக்கிக் கொண்டனர்.

அவர்களில் ஒரு நிறைமாத கர்ப்பிணி மற்றும் ஒரு சிறுமியும் அடங்குவர்.

குவாலா ரொம்பின் போலீஸ் நிலையத்திலிருந்து 3 அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

கர்ப்பிணி உள்ளிட்ட எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

பாலம் இடிந்து விழுந்ததால், 700-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினசரி பயன்படுத்தும் முக்கியச் சாலையை இது துண்டித்துள்ளது.

எனவே, பாலம் உடனடியாகப் பழுது பார்க்கப்பட வேண்டும் என அப்பகுதி வாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!