
ஷா அலாம், மே 14 – கிள்ளான் , பெர்சியாரன் கோத்தாவில் நேற்று குடிபோதையில் இருந்ததாக நம்பப்படும் ஒரு நபர் ஓட்டிச் சென்ற கார் போக்குவரத்து விதிமுறைக்கு எதிராக சென்று மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய விபத்தில் அவர் கடுமையாக காயம் அடைந்தார்.
அதிகாலை சுமார் 12.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் , மோதலின் தாக்கத்தால் தூக்கி எறியப்பட்டதாக நம்பப்படும் 20 வயது மதிக்கத்தக்க உள்ளூர் இளைஞர் ஒருவர் உடலிலும் வலது காலிலும் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
30 வயது மதிக்கத்தக்க உள்ளூர் நபர் ஓட்டி வந்த பெரோடுவா பெஸ்ஸா கார், போர்ட் கிளாங்கிலிருந்து ஷா ஆலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கவனக்குறைவாகவும் போக்குவரத்திற்கு எதிராகவும் ஓட்டப்பட்டதாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் லிம் ஜிட் ஹூவே (Lim Jit Huey) தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றார், அதே நேரத்தில் கார் ஓட்டுநருக்கு சொற்ப காயங்கள் மட்டுமே ஏற்பட்டன.
மது அல்லது போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டி காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 44(1A)-இன் பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு , நாளை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.



