Latestமலேசியா

KLIA விமான நிலையத்திற்கு அருகேயுள்ள தொழிற்சாலையில் அமிலவாயு கசிவில் எவரும் காயம் அடையவில்லை

செப்பாங், ஜன 13 – KLIA விமான நிலையத்திற்கு அருகேயுள்ள தொழிற்சாலையில் நேற்று அமில வாயு கசிந்த சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லையென சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத்துறை தெரிவித்திருக்கிறது. 20 மெட்ரிக் டன் டாங்க்கிலிருந்து அமில வாயு கசிவு ஏற்பட்டதாக நேற்று அதிகாலை மணி 3.10 அளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து உடனடியாக ஷா ஆலம் தீயணைப்பு மீட்பு குழுவைச் சேர்ந்த தீயணைப்பு மீட்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்தற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதோடு அந்த தொழிற்சாலை வழங்கிய பீப்பாயில் 10 மீட்டர் டன் அமில வாயுவை நிரப்புவதிலும் தீயணைப்பு வீரர்கள் வெற்றி பெற்றனர் என சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!