Latestமலேசியா

Pulau Perhentian தீவில் கடலில் குளித்த போது 74 வயது ஜெர்மன் மூதாட்டி நீரில் மூழ்கி மரணம்

பெசூட், மே-17, திரங்கானு Pulau Perhentian தீவில் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி மாண்டதாக நம்பப்படும் ஜெர்மன் நாட்டு மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

Pulau Perhentian Kecil-லில் உள்ள ஓர் உல்லாசத்தலத்தின் முன் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

Loosen Freiling Iris எனும் 74 வயது அம்மூதாட்டி சம்பவத்தின் போது கணவருடன் கடலில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் நீரில் மூழ்க, அவரின் கணவர் பிடித்து இழுத்து தரைக்குக் கொண்டு வந்து விட்டார்.

அப்போது சுயநினைவில்லாமல் இருந்த மனைவிக்கு அவரும் அங்கிருந்த பொது மக்களும் முதலுதவி செய்தும் அவர் கண் விழிக்கவில்லை.

உடனடியாக அருகில் உள்ள கிளினிக் கொண்டுச் செல்லப்பட்ட போது, அம்மூதாட்டி உயிரிழந்து விட்டது உறுதிபடுத்தப்பட்டது.

அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!