புத்ராஜெயா, டிசம்பர் 15 – 2023 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வில் அமரவுள்ள மாணவர்களுக்கான 2024/2025 கல்வி ஆண்டுக்கான மெட்ரிக்குலேஷன் கல்வி வாய்ப்புக்கான முதல் கட்ட விண்ணப்பங்கள், இன்று டிசம்பர் 15 ஆம் தேதி முதல் திறக்கப்படுகின்றன.
மார்ச் 31 ஆம் தேதி வரையில் திறக்கப்பட்டுள்ள இந்த விண்ணப்பங்களில் மெட்ரிக்குலேஷன் கல்வியை பெற விரும்பும் மாணவர்கள் விரைந்து விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
இதனிடையே மெட்ரிக்குலேஷன் கல்விக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள், 2023 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.