Latestமலேசியா

மித்ராவில் புதிய தலைமை இயக்குநராக ரவிக்குமார் சுப்பையா நியமனம்

கோலாலம்பூர், பிப் 17 – மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் புதிய தலைமை இயக்குநராக ரவிக்குமார் சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.

மித்ராவின் புதிய இலக்குகள் மற்றும் செயல்முறைகள் தொடர்பாக நேற்று ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமியுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மித்ராவின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கும் ரவிக்குமார் சுப்பையாவின் நியமனமானது, அரசு பொதுச் சேவை ஊழியர் துறையின் நேரடி நியமனம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மித்ராவின் தலைமை இயக்குநராக இருந்த ரவிந்திரன் நாயர் தற்போது வேறொரு அரசு துறைக்கு மாற்றலாகி சென்றுள்ளதாக அறியப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!