
லிவர்பூல், மே-27 – இங்லீஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வென்றதை இரசிகர்களுடன் கொண்டாடும் விதமாக லிவர்பூல் அணி நடத்திய ஊர்வலத்தை கார் மோதியதில், 4 சிறார்கள் உட்பட 47 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளை, ஒரு சிறுவன் உட்பட இருவரது நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது.
சிராய்ப்புப் காயங்களுக்கு ஆளான மேலும் 20 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டது.
இதனால் வெற்றிக் கொண்டாட்டம் சோகமாக மாறியது.
காரோட்டியான 53 வயது ஆடவர் உடனடியாகக் கைதுச் செய்யப்பட்டார்.
முன்னதாக படு வேகமாக காரோட்டி வந்த அவ்வாடவர் கூட்டத்தை மோதித் தள்ளினார்.
இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். Water Street சாலையே ‘கலவர’ பூமியாக மாறியிருந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.
இது, கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தா அல்லது திட்டமிட்ட கொலை முயற்சியா அல்லது தற்கொலை முயற்சியா என்ற எல்லா கோணத்திலும் போலீஸ் விசாரித்து வருகிறது.
லிவர்பூல் வீரர்களும் இரசிகர்களும் சமூக ஊடகங்களில் தங்களின் சோகத்தைப் பகிர்ந்து வருவதோடு, காயமடைந்தவர்கள் விரைந்து குணமடையவும் பிராத்தித்தனர்.