கோலாலம்பூர், ஜன 11 – இந்தியாவைப்போல் பாகிஸ்தானும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து சந்தையில் போதுமான வெங்காயம் இருப்பதோடு அதன் விலை நிலைத்தன்மையோடு இருப்பதற்கு இறக்குமதிக்கான புதிய நாடுகளை “Fama” எனப்படும் கூட்டரசு விவசாய சந்தை வாரியம் அடையாளம் காணவிருப்பதாக அதன் தலைவர் அமினுதீன் சுல்கிப்லி தெரிவித்திருக்கிறார். சீனப் புத்தாண்டு, ரமடான் மற்றும் நோன்பு பெருநாள் காலங்களில் வெங்காயத்திற்கான தேவை அதிகரிக்கும்போது தட்டுப்பாடு ஏற்படும் என அவர் தெரிவித்தார்.
இந்தியா தனது வெங்காய ஏற்றுமதியை நிறுத்தியதால் பாகிஸ்தான் மற்றும் சீனாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதில் கவனம் செலுத்தினோம். இப்போது தனது உள்நாட்டு தேவையை சமாளிக்க பாகிஸ்தானும் வெங்காய ஏற்றுமதியை நிறுத்தவிருப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக அமினுதீன் கூறினார்.