கோலாலம்பூர், நவ 2 – நாடு தொழில் புரட்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் தொழிற் திறன் கொண்டோர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளும் நல்ல வருமானமும் காத்திருக்கிறது. இத்துறையின் மூலம் இந்தியர்களை உருமாற்ற வேண்டும் அடிப்படையில் மித்ரா TVET எனும் தொழில் திறன் பயிற்சிகளுக்காக 11.46 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கி பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருவதாக மித்ரா சிறப்பு செயற்குழுவின் தலைவர் டத்தோ ரமணன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வெல்டிங், ஆட்டோமாஷன், இலட்ரிக், அட்டோமோடிவ், கணினி, உணவுத் துறை, ட்ரோன் மற்றும் சுற்றுலாப் போன்ற துறைகளில் 940 இந்திய இளைஞர்கள் தொழில் திறன் பயிற்சி பெற்று பயனடைவார்கள் என அவர் கூறினார்.
திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் அங்கீகாரம் பெற்ற 28 பயிற்சி நிறுவனங்கள் 30 பயிற்சி வழங்கவிருக்கின்றன. இந்திய இளைஞர்கள் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தொழில் தொழில் திறன் பயிற்சிகளில் சேர்ந்து வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டுமென சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் வலியுறுத்தினார்.