
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்21, பரஸ்பர வரி என்ற பெயரில் அமெரிக்கா அறிவித்த கூடுதல் வரியால் ஓட்டுமொத்த உலகமும் அதிர்ந்து போனது தெரிந்ததே.
இந்நிலையில் அக்கூடுதல் வரி மலேசியா மீது எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விவாதிக்க, கடந்த சனிக்கிழமை ஆய்வரங்கொன்று நடைபெற்றது.
BACPAC எனப்படும் Brickfields Asia College – Performing Arts Centre கல்லூரியின் பெட்டாலிங் ஜெயா வளாகத்தில் இலவசமாகஇது நடைபெற்றது.
Malaysian Inclusive Economic Transformation அல்லது MIET ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வாய்வரங்கில் வர்த்தக பிரமுகர்கள், தொழில்முனைவோர், பொருளாதார வல்லுநர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என சுமார் 50 பேர்கலந்துகொண்டனர்.
கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உலக வாணிப ஆய்வாளருமான சார்லஸ் சாந்தியாகோ, பொருளாதார வல்லுநரும் கொள்கை ஆலோசகருமான Dr கோபி, நாடறிந்த பொருளாதார நிபுணரும் Alliance வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார
வல்லுநருமான மனோகரன் மொட்டையன், கோலாலம்பூர்- சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் ஆகியோர் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
அமெரிக்காவின் நடவடிக்கையால் ஏற்படப் போகும் விளைவுகள் குறித்து அந்நால்வரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
மக்கள் நலன் கொள்கைகள் விமர்சகரும் ஊடகவியலாருமான தியாகராஜன் முத்துசாமி ஆய்வரங்கை வழிநடத்தினார்.
வந்திருந்தவர்களின் கேள்விகளுக்கும் பிரமுகர்கள் விளக்கமளித்தனர்.
நாள்தோறும் ஊடகங்களில் மட்டுமே கேட்டு வந்தஇந்த வரி விவகாரம் குறித்து, நேரில் விரிவாக தெரிந்துகொள்ள இந்த ஆய்வரங்கு நல்வாய்ப்பாக அமைந்ததாக வந்திருந்தவர்கள் கூறினர். MIET அமைப்பு இது போன்று பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் முதலீடு தொடர்பான விவகாரங்களை இந்திய சமூகத்திடம் மேலும் அதிகமாக கொண்டு சேர்க்க தொடர் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்