Latestஉலகம்

பஞ்சாப்பில் தனது பிறந்தநாளுக்கு ஆர்டர் செய்யப்பட்ட கேக் சாப்பிட்டு 10 வயது சிறுமி நச்சுணவுப் பாதிப்பால் மரணம்

பஞ்சாப், மார்ச் 31 – இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், 10 வயது சிறுமியின் பிறந்தநாளுக்கு Online-னில் ஆர்டர் செய்யப்பட்ட கேக், கடைசியில் அவளுக்கே எமனாகியத் துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

மார்ச்-24ஆம் தேதி இரவு 7 மணி வாக்கில் குடும்பத்தார் முன்னிலையில் Manvi பிறந்தநாள் கேக் வெட்டினாள்.

ஆனால் அந்த சந்தோஷம் அவர்களுக்கு நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

இரவு 10 மணிக்கெல்லாம் Manvi-யின் தங்கை வாந்தி எடுக்க, Manvi-க்கும் திடீரென அதிகமாகத் தாகம் எடுத்திருக்கிறது.

குடிக்கத் தண்ணீர் கேட்டவள் பின்னர் தூங்கச் சென்று விட்டாள்; வீட்டில் உள்ளவர்களுக்கும் கேக் சாப்பிட்டதில் வயிற்று உபாதைகள் வந்திருக்கின்றன.

மறுநாள் காலையில் Manvi-யின் உடல்நலம் மோசமாகி, குடும்பத்தார் அவளை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் Manvi-யின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என அவளின் தாத்தா சோகத்துடன் கூறினார்.

தாங்கள் ஆர்டர் செய்த அந்த சாக்லெட் கேக்கில் நச்சுப்பொருள் கலந்திருக்கலாம் என சந்தேகித்த குடும்பம், கேக் கடைக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளது.

சவப்பரிசோதனை நிறைவடைந்துள்ள நிலையில், Manvi-யின் உயிருக்கு எமனாய் முடிந்த கேக்கின் மாதிரியும் சோதனைக்காக ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆசை ஆசையாய் Manvi பிறந்தநாள் கேக் வெட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் முன்னதாக பகிரப்பட்ட நிலையில், நச்சுணவால் அவள் உயிரிழந்த சோகம் நெட்டிசங்களையும் ஆட்கொண்டிருக்கின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!