கோலாலம்பூர், மார்ச் 16 – கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்திலருந்து நேற்று தாவாவ் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸின் MH2664 விமானம் நடுவழியில் மீண்டும் KLIA விமான நிலையம் திரும்பியதை CAAM எனப்படும் மலேசியா சிவில் விமான போக்குவரத்துத்றை உறுதிப்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திடமிருந்து CAAM அறிக்கையை பெற்றதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி கேப்டன் டத்தோ நோராஸ்மான் மஹ்மூத் தெரிவித்தார்.
அந்த விமானம் நடுவழியில் திரும்பியது குறித்து தகவலை மட்டுமே அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேல் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அடுத்த 48 மணிநேரத்தில் இந்த விவகாரம் குறித்து CAAM அறிக்கை வெளியிடும் என நோராஸ்மான் மஹ்மூத் தெரிவித்தார். நேற்று மதியம் 2,45 அளவில் தாவாவ் புறப்பட்ட அந்த விமானம் மீண்டும் KLIA திரும்பியதாக www.flightaware com இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டது.