கோலாலம்பூர், நவ 5 – சான் சௌ லின் டோல் சாவடியை பயன்படுத்துவோருக்கு 30 நாட்களுக்கு டோல் கட்டணம் இலவசம் என பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி அறிவித்திருக்கிறார்.
SPE எனப்படும் ‘Lebuhraya Setiawangsa Pantai’ நெடுஞ்சாலை நேற்று முழுமையாக திறக்கப்பட்டதை முன்னிட்டு அந்த சாலையை பயன்படுத்துவோருக்கு 30 நாள் டோல் கட்டணம் இலவசமாக வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இன்று முதல் இவ்வாண்டு டிசம்பர் 23 ஆம் தேதி நள்ளிரவு மணி 11.59 வரை
சான் சௌ லின் டோல் சாவடியில் இலவசமாக பயணம் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
அதோடு கார்களுக்கான டோல் கட்டணம் 3 ரிங்கிட் 50 சென் விதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். SPE நெடுஞ்சாலையை தினசரி குறைந்த பட்சம் 100,000 வாகனங்கள் பயன்படுத்தும் என அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.