Latestமலேசியா

மலாக்காவில் மணல் உறிஞ்சும் சாதனத்தில் சிக்கிகொண்ட குத்தகை தொழிலாளி மரணம். 

பத்து பஹாட், மே 7 – பூட்டப்பட்ட வேனில் ஐந்து மணி நேரம் கைவிடப்பட்ட நிலையில் விட்டுச் செல்லப்பட்ட 5 வயது சிறுவன் மரணம் அடைந்தது தொடர்பில் 57 வயது வேண் ஓட்டுநர் மீது செசன்ஷ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. நீதிபதி முகமட் காலிட் அப்துல் கரிம் முன்னிலையில் யாவ் சீ வெங்கிற்கு ( Yau Chee Weng ) எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவர் அதனை மறுத்தார்.

அந்த சிறுவனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ஓய்வு பெற்றவரான Yau விடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட போதிலும், ஏப்ரல் 30 ஆம்தேதி காலை 8 மணி மற்றும் நண்பகல் மணி 12.05க்கிடையே ஜோகூர் பாரு ,தாமான் புக்கிட் இண்டாவில் அச்சிறுவனை வேனிலேயே கைவிட்டுச் சென்றதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் கூடியபட்சம் 50,000 ரிங்கிட்வரை அபராதம், 20 ஆண்டுகள்வரை சிறை அல்லது அவையிரண்டும் விதிக்கப்படும் சிறார் சட்டத்தின் 31 ஆவது விதி (1) (a) யின் கீழ் Yau மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அந்நபருக்கு 7,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு இந்த வழக்கு முடியும்வரை அரசு தரப்பு சாட்சிகளை தொடர்பு கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டதோடு கடப்பிதழை ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. எதிர்வரும் ஜூன் 16ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் மறுவாசிப்புக்கு வெவிமடுக்கப்படும்.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!