கோலாலம்பூர், பிப்ரவரி 8 – அண்டை வீட்டுக்காரர் நட்டு வைத்திருந்த செடியை, வேண்டுமென்றே மிதித்து சேதப்படுத்தும் பெண் ஒருவரின் காணொளி டிக் டொக்கிக் வைரலாகி, சீற்றத்தை தூண்டியுள்ளது.
CCTV இரகசிய கண்காணிப்பு காமிராவில் பதிவாகியிருந்த அந்த காட்சியை, சம்பந்தப்பட்ட அண்டை வீட்டுக்காரர் தனது @annzzle எனும் டிக் டொக் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அதில், “மாச்சேக்” என குறிப்பிடப்பட்டுள்ள, சம்பந்தப்பட்ட பெண், ஆடவர் ஒருவருடன் தனது ஹோண்டா HRV வாகனத்தை அண்டை வீட்டுக்காரரின் வீட்டிற்கு அருகில் நிறுத்துகிறார்.
எனினும், பின்னர் தனது வாகனத்தின் கதவில், அருகிலிருந்த செடியால் கீறல் விழுந்திருப்பதை காணும் அப்பெண் சினத்தில் அந்த செடியை மிதித்து சேதப்படுத்தும் காட்சிகள் அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன.
அச்சம்பவம் குறித்து, அண்டைக்காரர் தனது பதிவின் வாயிலாக வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த பெண்ணின் நடவடிக்கை ஏற்புடையது அல்ல எனவும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எனினும், அவர் அச்சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட “மாச்சேக்கை” நேரடியாக எதிர்கொண்டு கண்டனத்தை தெரிவித்தாரா? என்பது குறித்து அந்த பதிவில் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், அந்த மாச்சேக்கின் செயல் கொடூரமானது என பலர் சாடி வரும் வேளை ; சிலர் வீட்டிற்கு வெளியே செடிகளை நடுவதற்கு எதிராக வாதிட்டு வருகின்றனர்.