
லிவர்பூல், ஏப்ரல்-28, இங்லீஷ் பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் 20-ஆவது முறையாக லிவர்பூல் வாகை சூடியுள்ளது.
இப்பருவத்திற்கான வெற்றியாளர் பட்டத்தை உறுதிச் செய்ய ஒரேயொரு புள்ளி மட்டுமே அதற்கு தேவைப்பட்டது.
இந்நிலையில், நேற்றிரவு Anfield அரங்கில் Tottenham அணியை 5-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து அது முழு 3 புள்ளிகளைப் பெற்றது.
இரண்டாவது இடத்தில் உள்ள ஆர்செனல் அணியால் இனியும் முந்திச் செல்ல முடியாத அளவுக்கு 82 புள்ளிகளைப் பெற்றதால், லிவர்பூல் சாம்பியன் ஆனது.
ஆட்டம் முடிந்து விசில் ஊதப்பட்டதும் லிவர்பூல் ஆட்டக்காரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஆரத்தழுவினர்.
இரசிகர்களின் ஆரவாரத்தாலும் கரகோஷத்தாலும் அரங்கமே அதிர்ந்தது.
20-ஆவது முறையாக லீக் கிண்ணத்தை வென்றதை விட லிவர்பூல் இரசிகர்களுக்கு பெரும் ஆத்ம திருப்தி என்னவென்றால், பரம வைரியான மென்சஸ்டர் யுனைட்டெட் அணியின் சானையை சமன் செய்ததாகும்.
தற்போது யுனைட்டெட்டைப் போலவே லவர்பூலும் 20 முறை லீக் கிண்ணத்தை வென்றுள்ளது.
இதையடுத்து உலகம் முழுவதுமுள்ள லிவர்பூல் இரசிகர்கள் தங்களின் தாரக முழக்கமான You Never Walk Alone என்பதைக் குறிக்கும் YNWA-னை hashtag-காக பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் ஆர்செனல் இரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாகும்.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக லீக் கிண்ணத்தை வெல்வதில் அது தோல்வி கண்டிருப்பதே அதற்குக் காரணம்.