காஸா, ஜன 13 – இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தரப்பினருக்குடையிலான போரின் 98 ஆவது நாளான நேற்று இஸ்ரேல் படைகள் காஸாவில் தொடர்ந்து மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியது. காஸா மக்கள் பஞ்சத்தோடு தற்போது கடுமையான குளிர் கால நெருக்கடியையும் எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலைமையில் இஸ்ரேல் ராணுவம் ஈவு இரக்கமின்றி காஸாவில் தனது தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காஸாவின் வடக்குப் பகுதியிலிருந்து அடைக்கலம் தேடி மக்கள் தப்பியோடிய காஸாவின் தென் பகுதியிலுள்ள கான் யூனிஸ் மற்றும் ரஃபா வட்டாரத்தில் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் 59 பேர் மரணம் அடைந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.