ஜோர்ஜ் டவுன், பிப் 3 – பினாங்கு மலைக்கான கேபல் கார் திட்டம் இவ்வான்டு எப்ரல் மாதம் தொடங்கும் என பினாங்கு “Hill Corporation” பொது நிர்வாகி டத்தோ செயோக் லே லெங் தெரிவித்தார். ஏப்ரல் மாதம் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும். இன்று காலையில் பினாங்கு மலைக்கான நிலையத்தை முதலமைச்சர் சொவ் கோன் இயோவ் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது செயோக் லே லெங் இத்தகவலை வெளியிட்டார். சுற்றுச் சூழல் மீதான அறிக்கை உட்பட, தேவையான அனுமதிகளை நாங்கள் பெற்றுவிட்டோம் என செயோக் லே லெங் கூறினார்.
கேபல் கார் திட்டம் முழுமையடைவதற்கு சுமார் 18 மாதங்கள் பிடிக்கும் என்றும் வானிலை தொடர்பான அம்சங்களும் இதில் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்தார். பினாங்கு மலைக்கான கேபல் கார் திட்டத்திற்கு தேசிய திட்ட மன்றமும் அனுமதித்திருப்பதாக சொவ் கோன் இயோவும் கூறியுள்ளார்.