சன்டியாகோ, பிப் 6 – சிலி நாட்டின் மத்திய பகுதியில் வால்பரைசோ வட்டாரத்தில் நிகழ்ந்த காட்டுத் தீயில் இதுவரை குறைந்தது 122 பேர் மரணம் அடைந்தனர். அவர்களில் 32 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டதாக சிலி தடயயியல் மற்றும் சட்ட மருத்துவ சேவைகளின் அதிகாரிகள் தெரிவித்தனர். 40 உடல்களில் சவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமையன்று வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயில் வால்பரைசோவில் 11,000 ஹெக்டர் காடுகள் அழிந்த வேளையில் 3,000 முதல் 6,000 வீடுகள் சேதம் அடைந்தன. தீக்கான காரணத்தை கண்டறிவதற்கு இன்னமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.