மலாக்கா, ஏப் 15 – மலாக்காவில் , Masji Tanah வில் Jalan Kampung Paya Rumput ட்டில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பயணம் செய்த கார் மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் 82 வயது மாது மரணம் அடைந்த வேளையில் இதர மூவர் காயத்திற்குள்ளாகினர். இன்று அதிகாலை 12.50 மணியில் நிகழ்ந்த அந்த விபத்தில் கடுமையாக காயம் அடைந்த தீமா அபு என்ற பெண்மணி அலோர்காஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இறந்தார் என அலோர்காஜா போலீஸ் தலைவர் Superintendan Ashari Abu Samah தெரிவித்தார்.
இந்த விபத்தில் அந்த பெண்மணியின் 46 வயதுடைய மகள் , 50 வயதுடைய அவரது மருமகன் மற்றும் 6 வயது பேரப் பிள்ளையும் காயம் அடைந்தனர். அந்த நால்வர் பயணம் செய்த புரோட்டோன் வீரா கார் Perodua Axia காருடன் மோதிய பின்னர் எதிரே உள்ள சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் Perodua Axia கார் ஓட்டுனரும் காயம் அடைந்தார்.