Latestமலேசியா

கோலாலம்பூரில் தங்கும் விடுதியில் 6 ஆயுதங்களுடன் இஸ்ரேல் ஆடவர் கைது

கோலாலம்பூர், மார்ச் 31 – கோலாலம்பூர் ஜாலான் அம்பாங்கில் உள்ள ஹோட்டலில் ஆறு ஆயுதங்களுடன் இஸ்ரேலைச் சேர்ந்த ஆடவன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாட்சிமை தங்கிய பேரரசர் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோர் உட்பட நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்படும் என போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் உசேன் தெரிவித்திருக்கிறார்.

மக்கள் மற்றும் நாட்டின் முன்னணி தலைவர்கள் மீதான பாதுகாப்பு ஏற்பாட்டையும் கண்காணிப்பையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளதோடு தொடர்ந்து விழிப்பு நிலையில் இருப்பார்கள் என்றும் அவர் கூறினார். பாலஸ்தீன் – இஸ்ரேல் விவகாரத்தை பார்க்கையில் இப்போது பாதுகாப்பு நடவடிக்கையில் நாம் விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது.

பேரரசர் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட பல்வேறு தனிப்பட்ட முக்கிய நபர்களின் பாதுகாப்பு விவகாரங்களில் முழுமையான கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ரஸாருதீன் உசேன் தெரிவித்தார்.

அந்த சந்தேகப் பேர்வழி சில தனிப்பட்ட நபர்களை கொல்வதற்காக மலேசியாவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை இஸ்ரேல் ஏற்க மறுத்துள்தேடு அந்த ஆடவருக்கு வேறு திட்டம் இருக்கலாம் என தெரிவித்திருப்பதாகரஸாருதீன் உசேன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக பிரான்ஸ் நாட்டின் கடப்பிதழை பயன்படுத்தி இஸ்ரேல் பிரஜை ஒருவன் நாட்டிற்குள் புகுந்ததைத் தொடர்ந்து அந்த ஆடவன் புதன்கிழமையன்று ஜாலான் அம்பாங்கிலுள்ள ஹோட்டலில் கைது செய்யப்பட்டான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!