Latestஉலகம்

பக்கத்து வீட்டுக் கூரையில் ஏறிய பைக்; இரண்டு பெண்களின் சாகச் செயல்

இந்தோனேசியா, மார்ச் 13 – இந்தோனேசியாவில் இரு பெண்கள் ஒட்டிச் சென்ற பைக் ஒன்று, எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டு கூரையின் மீது ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் ஓட்டி சென்றுகொண்டிருந்த பைக், திடீரென கட்டுப்பாட்டை இழந்து அண்டை வீட்டின் கூரையின் மேல் ஏறி சிக்கியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, அங்குள்ள அண்டை வீட்டுக்காரர், அவர்களுக்கு உதவி கரம் நீட்டி, பைக்குடன் கூரையிலிருந்து கீழே இறக்கப்பட்டனர்.

இச்சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், மோட்டார் சைக்களின் பிரேக் பழுதடைந்ததன் விளைவாக இது நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

பொழுதுப்போக்காக பைக் எடுத்து செலுத்த நினைத்த இவர்களின் செயலானது தற்போது பலரது கேலிக்கைக்கு உட்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!