Latestமலேசியா

சீப்போர்ட் தமிழ்ப் பள்ளியின் சிறுவர் தினம் மிக சிறப்பாக நடைபெற்றது

கோலாலம்பூர், டிச 16 – பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள சீப்போர்ட் தமிழ்ப் பள்ளியின் சிறுவர் தினம் பள்ளி மண்டபத்தில் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பள்ளியின் மாணவர் நலப் பொறுப்பாசிரியர் புஷ்பராஜா தலைமையில் ஆசிரியர் திருமதி வினோதினி மற்றும் அவருக்கு துணையாக ஆசிரியர் தமயந்தி ஆகியோர் பொறுப்பேற்று இந்த நிகழ்ச்சியை மிக அற்புதமாக ஏற்பாடு செய்தனர்.

இறை வணக்கத்தோடு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயந்தி பெருமாள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருமதி ஜமுனா ஆகியோர் உரையாற்றினர்.

பல்வேறு சிரமங்களுக்கிடையே இந்த நிகழ்ச்சிக்கு மாணவர்களை சிறப்பாக பல வண்ணங்களைக் கொண்ட உடை அலங்காரத்தோடு தயார்படுத்திய ஆசிரியர்களை அவ்விருவரும் பாராட்டினர் .

இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞரும் , சுவரா ப்ரிஹாதின் ‘Suara Prihatin’ எனப்படும் சிலாங்கூர் பரிவுமிக்க குரல் அமைப்பின் தலைவருமான வினோஷன் மற்றும் அவரது தங்கை செல்வி துளசியும் கலந்துகொண்டு அனைத்து மாணவர்களுக்கும் வண்ணப் பெண்சில்களை வழங்கினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!