Latestமலேசியா

மாதந்திர முறையில் லஞ்சப் பணம் பெற்று வந்த அமலாக்க அதிகாரி ; MACC கைது

கோலாலம்பூர், மார்ச் 20 – மாதம்தோறும் 500 ரிங்கிட்டை கையூட்டாக பெற்று வந்த அமலாக்க அதிகாரி ஒருவரை, சபா மாநில ஊழல் ஒழிப்பு ஆணையம் கைதுச் செய்துள்ளது.

உரிமம் பெற்ற பணமாற்று நிறுவனம் ஒன்றிடமிருந்து, அந்த 40 வயது அதிகாரி மாதாந்திர அடிப்படையில் கையூட்டு பணத்தை பெற்று வந்த வேளை ; இதுவரை மொத்தம் நான்காயிரம் ரிங்கிட்டை அவர் கையூட்டாக பெற்றதாக கூறப்படுகிறது.

2020-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையில், வங்கி பணமாற்று நடவடிக்கை வாயிலால அவர் அந்த பணத்தை பெற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.

இன்று காலை மணி ஒன்பது வாக்கில், சபா மாநில ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு, வாக்குமூலம் அளிக்க வந்த போது அவர் கைதுச் செய்யப்பட்டார்.

அந்த அதிகாரிக்கு எதிராக, ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் 17(a) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதை, சபா மாநில ஊழல் தடுப்பு ஆணைய இயக்குனர் டத்தோ கருணாநிதி சுப்பையா உறுதிப்படுத்தியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!