புத்ரா ஜெயா , நவ 1 – 68 இடங்களில் கோழி இறைச்சி ஒரு கிலோவுக்கு 9 ரிங்கிட் 40 sen என்ற விலையை விட கூடுதல் விலையில் விற்கப்பட்டதாக உள்நாட்டு வாணிக மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சர் அர்மிசான் அலி தெரிவித்தார். நாடு முழுவதிலும் இன்று பிற்பகல் ஒரு மணிவரை 1,484 இடங்களில் கோழி இறைச்சி விலை கண்காணிப்பட்டதை அடிப்படையாக கொண்டு தாம் இந்த தகவலை வெளியிடுவதாக அவர் கூறினார். 4.6 விழுக்காடு இடங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சி 9 ரிங்கிட் 40 சென் என்ற விலைக்கு மேல் விற்கப்பட்டது. எனவே இதற்கு முன் இருந்த கட்டுப்பாட்டு விலையை விட கோழி விலை கூடுதலாக விற்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளதாக அர்மிசான் அலி கூறினார்.