Latestமலேசியா

கிறிஸ்துமசை முன்னிட்டு, டிசம்பர் 23,26-ஆம் தேதிகளில், டோல் கட்டணம் செலுத்த தேவையில்லை

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 21 – இம்மாதம் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளில், இரண்டு நாட்களுக்கு டோல் கட்டணத்திற்கு விலக்களிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

டிசம்பர் 23 மற்றும் 26-ஆம் தேதிகளில், நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் அனைத்து ரக வாகனங்களுக்கும், அந்த விலக்கு அளிக்கப்படுமென, நிதி துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் மஸ்லான் தெரிவித்தார்.

இம்மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அது குறித்து முடிவுச் செய்யப்பட்டதாகவும், துணையமைச்சர் சொன்னார்.

நாட்டின் நுழைவாயில்களில் அமைந்துள்ள, சுல்தான் இஸ்காண்டார் கட்டட டோல் சாவடியையும், தஞ்சோங் கூபாங் டோல் சாவடியையும் தவிர்த்து, நாட்டிலுள்ள இதர டோல் சாவடிகளை பயன்படுத்தும் அனைத்து ரக வாகனங்களுக்கும் அந்த கட்டண விலக்கு அளிக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!