கோலாலம்பூர், டிச 14 – ஜெய்ன் ரய்யான் குடும்பத்தினர் வசித்துவரும் டமன்சாரா டாமாய்யிலுள்ள இடமான் அடுக்குமாடி குடியிருப்பில் டிசம்பர் 5ஆம்தேதி பிற்பலில் 6 வயது சிறுவன் ஜெய்ன் ரய்யானை பார்த்தாக இரண்டு சிறுவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
புளொக் R அடுக்ககத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடியில் ஜெய்ன் ரய்யான் னை பார்த்ததாக அந்த இரு சிறுவர்களும் கூறியிருப்பதாக இன்று வெளிட்ட அறிக்கையில் சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் தெரித்திருக்கிறார். அந்த சிறுவர்கள் வழங்கியிருக்கும் இந்த சாட்சியம் தங்களது விசாரணைக்கு மேலும் உதவியாக இருக்கும் என உசேய்ன் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று காணாமல்போனதாக அறிவிக்கப்பட்ட ஜெய்ன் ரய்யானின் உடல் மறுநாள் புதன்கிழமை இரவு அவனது வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவிலுள்ள நீரோடைக்கு அருகே இறந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.
அச்சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கு அடையாளமாக அவனது கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது சவப் பரிசோதனை மூலம் தெரியவந்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர்.