
பெந்தோங், ஜூன்-6 -5 ஆடம்பர வாகனங்களை ஏற்றிச் சென்ற லாரி கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் தீயில் கருகியது.
எனினும் இரவு 11.20 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் 4 MPV வாகனங்களும் 1 SUV வாகனமும் தீயிலிருந்து தப்பின.
34 வயது லாரி ஓட்டுநரும் காயமின்றி உயிர் தப்பினார்.
சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு-மீட்புக் குழுவினர் சுமார் அரை மணி நேரங்களில் தீயை அணைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
லாரியின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே தீ பரவியதற்குக் காரணம் என தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.