மூவார், ஜனவரி 15 – காதலியின் மகளை மானபங்கம் செய்த ஆடவனின் ஜாமீன் மனுவை, இன்று ஜோகூர், மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து, அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பை கருதில் கொண்டு, 53 வயது அஜ்மான் அப்துல்லா எனும் அந்த ஆடவனை, ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதிக்ககூடாது எனும் அரசாங்க தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டதால், அவ்வாடவன் சிறையில் அடைக்கப்பட்டான்.
கடந்த திங்கட்கிழமை, காலை மணி எட்டு வாக்கில், மூவாரிலுள்ள, வீடொன்றில், 17 வயது யுவதியிடம், திருமணமாகி ஒரு பிள்ளைக்கு தந்தையான அஜ்மான், ஆபாச சேட்டைகளை புரிந்ததாக, குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்.
பாதிக்கப்பட்ட யுவதியின் தாய் வேலைக்கு சென்றிருந்த போது, வீட்டில் தனியாக இருந்த அவரிடம், கதவை பூட்டி விட்டு அஜ்மான் காம சேட்டைகளை புரிந்துள்ளான்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
இவ்வழக்கு விசாரணை பிப்ரவரி 19-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.