Latestஉலகம்

அமெரிக்காவில் இந்திய தம்பதியர் துப்பாக்கி சூட்டு காயத்தோடு இறந்து கிடந்தனர்

புதுடில்லி, பிப் 15 – அமெரிக்கா கலிபோர்னியாவிலுள்ள தங்களது இல்லத்தில் கேரளாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தம்பதியர் துப்பாக்கி சூட்டு காயத்தோடு இறந்து கிடந்தனர். இது கொலை மற்றும் தற்கொலை விவகாரமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. 42 வயதுடைய ஆனந்த் சுஜித் ஹென்றி, அவரது மனைவியான 40 வயதுடைய ஆலிஸ் பிரியங்கா மற்றும் அவர்களது 4 வயதுடை இரட்டைக் குழந்தைகளாக நோவா மற்றும் நாதன் ஆகியோர் தங்களது 2 மில்லியன் டாலர் அமெரிக்க இல்லத்தில் இறந்து கிடந்தனர். தொலைபேசியில் அழைத்தும் அவ்வீட்டிலிருந்து எவரும் பதில் அளிக்கத் தவறியது குறித்து குடும்ப உறுப்பினர்கள் போலீசிற்கு தெரிவித்ததைத் தொடர்ந்து அவ்வீட்டிற்கு சென்ற போலீசார் அந்த குடும்பத்தினர் இறந்து கிடப்பதைக் கண்டனர்.

இந்திய அமெரிக்க தம்பதியான ஆனந்த் மற்றும் ஆலிஸ் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் படுக்கை அறையில் இறந்து கிடந்தனர். அவர்களது இரட்டைக் குழந்தைகளும் படுக்கை அறையில் இறந்து கிடந்தனர். அவர்களது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வீட்டில் எவரும் வலுக்கட்டாயமாக புகுந்ததற்கான அடையாளம் எதுவும் காணப்படவில்லை, பூட்டப்படாத ஜன்னல் மூலம் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இரண்டு சிறார்களுடன் இரண்டு பெரியவர்களும் இறந்து கிடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவ்வீட்டின் குளியல் அறையில் தோட்டா நிரப்பப்பட்ட நிலையில் 9mm கைத்துப்பாக்கி இருந்ததையும் போலீசார் கண்டுப் பிடித்தனர். ஆனால் குழந்தைகளின் உடலில் துப்பாக்கி சூடு காயங்கள் எதுவும் இல்லை. அந்த தம்பதியிர் அந்த வீட்டை 2020ஆம் ஆண்டில் 2.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வீட்டிற்குள் இறந்து கிடந்த சம்பவம் கலிபோர்னியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!