இந்தோனேசியா, டிச 4 – இந்தோனேசியவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மராபி எரிமலை நேற்ற்ய் ஞாயிற்றுக்கிழமை வெடித்து, எரிமலை சாம்பலை 3,000 மீட்டர் வரை வான் நோக்கி காற்றில் கக்கியதாக நாட்டின் எரிசக்தி அமைச்சகத்தின் புவியியல் நிறுவனத்தின் தலைவர் ஹென்ட்ரா குணவன் தெரிவித்தார்.
உள்ளூர் நேரப்படி மதியம் 2.54 மணிக்கு 2,981 மீட்டர் உயரம் கொண்ட அந்த எரிமலை வெடித்து, சாம்பல் நிற அடர் புகைமூட்டங்களும், சாம்பல் துகள்களும் அங்கு சூழ்ந்துள்ளன.
இதனால், அப்பகுதிக்கு வரும் மலையேறிகள் தொப்பிகள், கண்ணாடிகள் மற்றும் முகமூடிகளை அணிந்து எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வெடிப்பினால் சுற்று வட்டாரப் பகுதியில் மூன்றாம் கட்ட எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.