கோலாலம்பூர், டிச 12 – கிளந்தான், மச்சாங் கில் தனது வீட்டில் கூரையை பழுதுபார்த்துக்கொண்டிருந்த லோரி ஓட்டுனர் ஒருவர் மின்சாரம் தாக்கியதால் மரணம் அடைந்தார். 54 வயதுடைய ஜோஹரி தஹர் என்ற அந்த ஆடவர் நேற்று மாலை மணி 5 அளவில் சுயநினைவின்றி இருந்ததை அவரது மனைவி கண்டதாக மச்சாங் போலீஸ் தலைவர் முகமட் அட்லி மாட் டாட் தெரிவித்தார். வீட்டின் கூரையை பழுதுபார்த்துக்கொண்டிருந்த ஜோஹரி தஹர் திடீரென இரும்பு ஒன்றில் கை வைத்தபோது அதில் பாய்ந்திருந்த மின்சாரம் அவரை தாக்கியது. உடனடியாக மாச்சாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போதிலும் நேற்றிரவு 7 மணியளவில் அங்கு அவர் இறந்தார் என முகமட் அட்லி மாட் டாட் கூறினார்.
Related Articles
சபா, குவாலா பெஞ்யு கடற்கரையில் ஆயிரக்கணக்கான ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கிய சம்பவம் ; அதீத வெப்பமான வானிலை தான் காரணமா?
1 hour ago
ஐந்து லட்சம் ரிங்கிட் இருந்த ‘சூட்கேஸ்’ ; ஒரு வாரம் ஆகியும், இன்னும் உரிமைக் கோர யாரும் முன் வரவில்லை
1 hour ago