சித்தியவான், டிசம்பர் 16: ஈப்போவில் 42 வயது மனநலம் குன்றிய ஆடவர், காணாமல் போனதாக இரண்டு நாட்களுக்கு முன் கூறப்பட்டது.
இதனிடையே, நேற்று 5 மணிக்கு பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலை கொண்டு, சித்தியவான் அருகே உள்ள வாய்க்காலில் அவரின் சடலம் மிதந்துள்ளதை போலிஸ் கண்டெடுத்துள்ளனர்.
மஞ்ஜூங் காவல்துறைத் தலைவர் நோர்டின் அப்துல்லா கூறுகையில், பாதிக்கப்பட்டவர் 4 மீட்டர் ஆழமுள்ள வடிகாலில் சிக்கிக் கிடந்துள்ளார் என்று கூறினார்.
பலியானவரின் உடல் சவப் பரிசோதனைக்காகக் செரி மஞ்ஜூங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் போலிசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.