Latestமலேசியா

இரு நாட்களாக காணாமல் போன மனநலம் குன்றியவரின் சடலம் வாய்க்காலில் மீட்பு

சித்தியவான், டிசம்பர் 16: ஈப்போவில் 42 வயது மனநலம் குன்றிய ஆடவர், காணாமல் போனதாக இரண்டு நாட்களுக்கு முன் கூறப்பட்டது.

இதனிடையே, நேற்று 5 மணிக்கு பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலை கொண்டு, சித்தியவான் அருகே உள்ள வாய்க்காலில் அவரின் சடலம் மிதந்துள்ளதை போலிஸ் கண்டெடுத்துள்ளனர்.

மஞ்ஜூங் காவல்துறைத் தலைவர் நோர்டின் அப்துல்லா கூறுகையில், பாதிக்கப்பட்டவர் 4 மீட்டர் ஆழமுள்ள வடிகாலில் சிக்கிக் கிடந்துள்ளார் என்று கூறினார்.

பலியானவரின் உடல் சவப் பரிசோதனைக்காகக் செரி மஞ்ஜூங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் போலிசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!