ரானாவ், டிசம்பர் 4 – சபா, கினபாலு மலை உச்சியிலிருந்து, மழைநீர் மீண்டும் பெருக்கெடுத்து ஓடியது.
இன்று காலை அந்த அதிசய சம்பவம் நிகழ்ந்ததை, சபா பூங்கா இயக்குனர் டாக்டர் மக்லரின் லகிம் உறுதிப்படுத்தினார்.
நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சம்பவத்தின் போது கினபாலு மலையில் இருந்த மலையேறிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக கீழே வந்தனர் என மக்லரின் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதனால், உயிருடற் சேதம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
அந்த வித்தியாசமான நிகழ்வு கினபாலு மலையேறிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டியதன் அவசியத்தை புலப்படுத்துவதாகவும் மக்லரின் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி, அடை மழையைத் தொடர்ந்து, நீர்வீச்சியை போல நீர் பெருக்கெடுத்து ஓடியதால், மலையேறிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கினபாலு மலையை ஏறுவதற்கான பாதைகளை, சபா பூங்கா தற்காலிகமாக மூடியது குறிப்பிடத்தக்கது.