ஜோகூர் பாரு, மார்ச் 6 – பத்து பஹாட்டில் கைவிடப்பட்ட வீடு ஒன்றில் மனித எலும்புக் கூடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. Jalan Besar Tongkang Pechah வில் கைவிடப்பட்ட வீட்டில் மனித கால் ஒன்றின் எலும்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக Batu Pahat OCPD துணை கமிஷனர் Ismail Dallah
தெரிவித்தார். பிப்ரவரி 28ஆம் தேதி காலை மணி 11.30 அளவில் அந்த எலும்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த காலி வீட்டிற்கு ஜோகூர் போலீஸ் தலைமையகத்தின் தடயயியல் பிரிவின் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். தொடை எலும்பு மற்றும் கால் முன் எலும்பு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதோடு அவை மரபணு ஆய்வுக்காக ரசாயனத் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஒரு மாதத்திற்குப் பின்னரே ரசாயனத்துறையின் முடிவு தெரியும் என Ismail Dolah கூறினார்.