கோலாலம்பூர், ஜன 22 -ஜோகூர் பாரு, பெர்மாஸ் ஜெயா வட்டாரத்தில் பொது இடத்தில் நிர்வாணமாக சென்ற வெளிநாட்டு ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் 37 வயதுடைய அந்த ஆடவரை வெள்ளிக்கிமையன்று அதிகாலை மணி 1.38 அளவில் கைதுசெய்தனர். தங்கும் விடுதியின் பராமரிப்பாளர் ஒருவரிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அந்நபர் கைது செய்யப்பட்டதாக தென் ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ரவுப் செலமட் தெரிவித்தார்.
தமது காதலி தம்மை விட்டு பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த அந்த நபர் நிர்வாணத்தோடு பொது இடத்தில் காணப்பட்டதை தொடர்ந்து அந்நபர் கைது செய்யப்பட்டார். 5 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை அல்லலது அபராதம் மற்றும் இவையிரண்டும் விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 509 ஆவது விதியின் கீழ் அந்த நபருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ரவுப் செலமட் தெரிவித்தார்.