Latestமலேசியா

பஸ் விபத்தில் உயிரிழந்த உப்சி பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பத்திற்கு பேரா சுல்தான் , தம்பதியர் அனுதாபம்

கோலாலம்பூர், ஜூன் 9 – இன்று அதிகாலையில் நிகழ்ந்த பஸ் விபத்தில் உயிரிழந்த தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்களின் குடும்பத்திற்கு மேன்மை தங்கிய பேரா சுல்தான் நஸ்ரின் முய்சுடின் ஷா ( Sultan Nazrin Muizzuddin Shah ) மற்றும் பேரா ராஜா பெர்மைசூரியும் , உப்சி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான துவாங்கு ஷாரா சலிம் ( Tuanku Zara Salim ) ஆகியோர் தங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டனர். சுல்தான் நஷ்ரினும், Tuanku Zara Salim மும் இதற்கு முன்னதாக ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு வருகை புரிந்து இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அந்த விபத்து குறித்து விளக்கம் பெற்றனர்.

Jalan Raya Timur Barat Gerik -Jeli சாலையின் 53ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த அந்த விபத்தில் 24 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 22 பேர் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றதோடு இதர இருவர் இன்னமும் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபோன்ற மோசமான விபத்துக்கள் இனி மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு அனைத்து தரப்பினரும் முன்னெச்சரிக்கையுடன் செயல் படவேண்டும் என சுல்தான் நஸ்ரின் தம்பதியர் கேட்டுக்கொண்டனர். அதோடு இதுபோன்ற கோர விபத்துக்கள் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கு அது தொடர்பான விதிமுறைகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த விபத்தில் தங்களது பிள்ளைகள் மற்றும் நேசத்திற்குரியவர்களை இழந்த பெற்றோர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் சுல்தான் நஸ்ரின் மற்றும் அவரது துணைவியார் தங்களது கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!