சிட்னி, மார்ச் 27 –விழுந்த தனது கைத்தொலைபேசியை எடுப்பதற்காக வடிகாலுக்குள் இறங்கிய ஆடவர் ஒருவரின் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அமைந்துள்ள வடிகால் ஒன்றில், வடிகால் நீரைக் குடித்துக் கொண்டு, சுமார் 36 மணி நேரம் சிக்கிக்கொண்டிருந்த ஆடவர் மீட்கப்பட்டுள்ளார்.
அந்த வடிகாலில் இருந்து மூச்சுவிடும் சத்தம் கேட்டு, குடியிருப்பாளர் ஒருவர் கொடுத்த தகவலை தொடர்ந்து மீட்புப் படையினர் அவரை காப்பாற்றியுள்ளனர்.
அதனை தொடர்ந்து, சிராய்ப்புக் காயங்களும் குளிரால் பாதிக்கப்பட்டிருந்த அந்த ஆடவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல் சீராக உள்ளாதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
முன்னதாக அவரை பார்த்த வழிப்போக்கர் வழங்கிய உதவியை அவர் மறுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, வடிகாலுக்குள் விழுந்த அந்த கைத்தொலைபேசி மீட்கப்பட்டத இல்லையா என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.