
புக்கிட் ஜாலில், டிசம்பர் 27-இன்றிரவு புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கம் ‘தளபதி திருவிழா’வால் களைக்கட்டவிருக்கும் நிலையில், என்றும் இல்லாத அளவுக்கு பிரமாண்ட உணவுத் திருவிழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Colours of India ஏற்பாட்டில் 200-க்கும் மேற்பட்ட உணவு விற்பனையாளர்கள் ஒரே இடத்தில் கூடுகின்றனர்.
10 மணி நேரங்களுக்கு சுமார் 1 லட்சம் பேருக்குத் தேவையான பலவித உணவுகளும் பானங்களும் இங்கு கிடைக்கும்.
எனவே, தளபதி விஜயைக் காண வரும் அதே வேளை, இந்த மாபெரும் உணவுத் திருவிழாவிலும் பங்குகொண்டு மகிழ்வுறுமாறு, Colors of India இரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவோடு, விஜய்க்கு திரையுலகிலிருந்து பிரியாவிடை வழங்கும் வகையில் மாபெரும் இசை நிகழ்ச்சியாகவும் இந்த ‘தளபதி திருவிழா’ அமைகிறது.



