Latestமலேசியா

போதைப் பொருள் விநியோக கும்பல் முறியடிப்பு 18.56 கிலோ கஞ்சா பறிமுதல்

கோலாலம்பூர், மார்ச் 7- போதைப் பொருள் விநியோகிக்கும் கும்பலை முறியடித்த போலீசார் 68,000 ரிங்கிட்டிற்கும் கூடுதல் மதிப்பைக் கொண்ட 18.56 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அக்கும்பலைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டதை செந்தூல் OCPD துணை கமிஷனர் Ahmad Sukarno உறுதிப்படுத்தினார். பிப்ரவரி 26 ஆம் தேதி Batu Caves சில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஒரு ஆடவர் கைது செய்யப்பட்டதோடு 3.5 கிலோ உலரவைக்கப்பட்ட கஞ்சா இலைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

அவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை யில் மேலும் நான்கு ஆடவர்களும் , 5 பெண்களும் கைது செய்யப்பட்டதோடு 6.67 கிலோ போதைப் பொருள் கோம்பாக்கிலுள்ள ஆடம்பர அடுக்ககத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. மறுநாள் செந்தூலிலுள்ள அடுக்ககத்தில் மேலும் 276 .5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு இதர இருவர் கைது செய்யப்பட்டதாக Ahmad Sukarno தெரிவித்தார். இந்த கும்பல் மூன்று முதல் 9 மாத காலமாக க செயல்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!