கோலாலம்பூர், பிப் 20 – தமது தூங்கும் துணையை கற்பழித்தது மற்றும் பயணத்தின்போது அப்பெண்ணை கடத்தி வைத்திருந்த குற்றத்திற்காக மலேசிய ஆடவர் ஒருவருக்கு நியூசிலாந்து நீதிமன்றம் 5 ஆண்டு 9 மாதம் சிறைத்தண்டனை விதித்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் நலன் காரணமாக அந்த ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை. சம்பந்தப்பட்ட அந்த ஆடவரும் பெண்ணும் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியூசிலாந்து சென்றடைந்தனர். குற்றச்சாட்டு மீதான விசாரணைக்காக அந்த ஆடவர் ஒரு ஆண்டுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டிருந்தார். 2021 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அவர் அப்பெண்ணை கற்பழித்ததோடு வெளியே அழைத்துச் சென்றபோது காரில் தடுத்து வைத்திருந்தகாவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். அந்த இருவரும்ம் Tasman வட்டாரத்திலுள்ள ஒரு வீட்டில் ஒரு உள்ள ஒரு அறையில் தங்கியிருந்தபோது அந்த ஆடவர் கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.